பிரபாஸுக்கு வில்லனாக அரவிந்த்சாமி?

பிரபாஸ் நடித்து வரும் படத்தின் வில்லனாக அரவிந்த்சாமி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

'சாஹோ' வெளியீட்டுக்கு முன்பாகவே, தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் பிரபாஸ். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை ராதா கிருஷ்ணா இயக்கி வருகிறார்.பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை அனைத்து மொழிகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதில் பிரபாஸுக்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பை ஜார்ஜியாவில் முடித்துவிட்டு திரும்பியதால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் பிரபாஸ். அதற்குப் பிறகும் கூட எங்குமே வெளியே வராமல் வீட்டிலேயே குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவு செய்து வருகிறார்கள்.

இதனிடையே இந்தப் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரவிந்த்சாமி தரப்பில் விசாரித்த போது, "முதலில் ஒரு நடிகர் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திய பிறகே முடிவு செய்வார்கள். ஆனால், அரவிந்த்சாமி சாரிடம் யாருமே பேச்சுவார்த்தையே நடத்தவில்லை. பின்பு எப்படி அவர் நடிப்பார். இது வெறும் வதந்தியே" என்று தெரிவித்தார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, 'மஹாநடி' இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் பிரபாஸ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE