'வடசென்னை 2' எப்போது? - இயக்குநர் வெற்றிமாறன் தகவல்

By செய்திப்பிரிவு

'வடசென்னை 2' எப்போது உருவாகும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் 'வடசென்னை'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படம் 2 பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

முதல் பாகத்தின் முடிவிலேயே, கதை இன்னும் முற்றுபெறாமல் இருக்கிறது. இதனால், 2-ம் பாகம் எப்போது என்பதே தெரியாமல் இருக்கிறது. தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்து 'வடசென்னை 2' படத்தை எப்போது தொடங்குவார்கள் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருக்கிறது.

தற்போது 'வடசென்னை 2' குறித்து இயக்குநர் வெற்றிமாறன், " 'வடசென்னை 2' படத்துக்கு இன்னும் நேரமாகும். அதை ஒரு வெப்சீரிஸாக (இரண்டு சீஸன்களாக) எடுக்கலாமா என்ற யோசனையும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் தளத்துக்காக இயக்கி வரும் ஆந்தலாஜி குறித்து இயக்குநர் வெற்றிமாறன், "ஆந்தாலஜி படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். இன்னும் இரண்டு நாட்களில் இறுதிக்கட்ட வேலைகளை முடித்துவிடுவேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE