யுத்தத்தில் இருக்கிறோம், வெற்றி பெறுவோம்: ராஷ்மிகா மந்தனா

By செய்திப்பிரிவு

நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம். அதில் நாம் வெற்றி பெறுவோம் என்று ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவருமே அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகிறார்கள்.

பிரபலங்களுக்கும் படப்பிடிப்பு இல்லாததால், வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். சமூக வலைதளம் வழியே தங்களுடைய பங்குக்கிற்கு விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ராஷ்மிகா மந்தனா கையில் விளக்கு வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"உங்கள் வாழ்க்கை விளக்கைப் போல பிரகாசமாக இருக்கட்டும். ஒரு நொடி கூட ஒளி மங்க விடாதீர்கள். நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம். நாம் வெற்றி பெறுவோம். நான் இதைச் சொல்லக் கொண்டே இருக்கக் காரணம் நமக்கு வேறு வழி இல்லை என்பதால் தான். உங்களுக்குச் சாத்தியப்பட்டால், யாருக்கெல்லாம் முடியுமோ உதவுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து நின்று இதைக் கடப்போம்"

இவ்வாறு ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE