கரோனா அச்சம் தொடர்பாகப் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால், பெப்சி தொழிலாளர்களுக்கு சூர்யா குடும்பத்தினர் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசு. மேலும், கல்விக் கூடங்கள், திரையரங்குகள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளன.
மேலும் படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பெப்சி தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பெப்சி தொழிலாளர்களின் நிலையை எடுத்துரைத்தும், அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் நடிகர் - நடிகைகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.
தற்போது நடிகர்களில் முதல் நபராக சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்ச ரூபாய் பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளனர். சூர்யாவைத் தொடர்ந்து பல்வேறு நடிகர் - நடிகைகள் உதவ முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
» கரோனா அச்சம்: பெப்சி தொழிலாளர்களின் நிலை; நடிகர் - நடிகைகளுக்கு ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்
» தனிமரம் தோப்பாகும் என்பதை நிரூபித்தவர் விசு: பார்த்திபன் புகழாஞ்சலி