சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 'டிக்கிலோனா' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
எழுத்தாளர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி வந்த படம் ‘டிக்கிலோனா’.‘பலூன்’ இயக்குநர் சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணிபுரிந்து வருகிறார்.
இதில் சந்தானம் மூன்று கெட்டப்களில் நடித்து வந்தார். யோகி பாபு, அனகா, ஷிரின் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷா ரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார் ஹர்பஜன் சிங்.
'டிக்கிலோனா' படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக, படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி, விரைவில் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கத் தீர்மானித்துள்ளது படக்குழு.
» நான் கொஞ்சம் சோம்பேறி ஆகிவிட்டேன்: நஸ்ரியா
» என் படத்தோல்வியை அம்மா தாங்கிக் கொள்ள மாட்டார்: துல்கர் சல்மான்