காரை வெடிக்க வைத்​து கொல்​வோம்: சல்​மான் கானுக்கு மீண்​டும் மிரட்​டல்

By செய்திப்பிரிவு

மும்பை: பிரபல இந்தி நடிகர் சல்​மான் கான். இவர் கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்​தானுக்​குப் படப்​பிடிப்​புக்​குச் சென்​ற​போது, அரிய வகை மான்​களை வேட்​டை​யாடிய​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.

பிஷ்னோய் இன மக்​கள், அந்த அரிய​வகை மான்​களைப் புனித​மாகக் கருதுகின்​றனர். இதனால் பிஷ்னோய் சமூகத்​தைச் சேர்ந்த கேங்​ஸ்​டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்​பல், சல்​மான்​கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்​டல் விடுத்து வரு​கிறது.

மும்பை பாந்த்​ரா​வில் உள்ள சல்​மான் கானின் வீட்​டுக்கு வெளி​யே, கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் துப்​பாக்​கிச் சூடு நடத்​தப்​பட்​டது. இது அப்​போது பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இந்த சம்​பவம் முடிந்து ஒரு வருடம் நிறைவடை​யும் நிலை​யில், மும்பை வொர்​லி​யில் உள்ள போக்​கு​வரத்​துத் துறை​யின் வாட்ஸ் அப் உதவி எண்​ணுக்கு ஒரு மெசேஜ் வந்​துள்​ளது.

அதில், சல்​மான் கானின் காரை வெடிகுண்டு வைத்து தகர்ப்​போம் என்​றும் வீட்​டுக்​குள் புகுந்து அவரை கொல்​வோம் என்​றும் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டுள்​ளது. மும்பை போலீ​ஸார் இது தொடர்​பாக வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்