விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு: கைதாகிறார் நடிகர் சித்திக்?

By செய்திப்பிரிவு

பிரபல மலையாள நடிகர் சித்திக், தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நடிகை ஒருவர் போலீஸில் புகார் கூறினார். இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. உச்ச நீதிமன்றம் மூலம் அவர் முன் ஜாமீன் பெற்றார்.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் சித்திக் விசாரணைக்கு ஆஜரானார். சனிக்கிழமை அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜரான போது, சிறப்பு விசாரணைக் குழு போலீஸார், ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் பெரும்பாலான கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. தனது தரப்பு நியாயத்துக்கான எந்த ஆவணங்களையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. சரியாக ஒத்துழைப்பு வழங்காததால் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சினிமா

38 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்