‘டாடா’ பட இயக்குநருடன் கைகோக்கும் ஜெயம் ரவி: டிசம்பரில் படப்பிடிப்பு தொடக்கம்!

By செய்திப்பிரிவு

சென்னை: ‘டாடா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக ‘சைரன்’ படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள ‘ப்ரதர்’ படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. அடுத்து ‘ஜெனி’, ‘காதலிக்க நேரமில்லை’ ஆகிய படங்கள் லைன் அப்பில் உள்ளன.

இந்நிலையில் இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி ‘டாடா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். ‘JR34’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஸ்கிரீன் சீன் மீடியா சார்பில் சுந்தர் ஆறுமுகம் படத்தை தயாரிக்கிறார். ‘ப்ரதர்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைகிறார் ஜெயம் ரவி. படம் தொடர்பான அறிவிப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரை பொறுத்தவரை இரு வேறு முகங்கள் கொண்ட தோற்றத்தில் முறைப்பாக காட்சியளிக்கிறார் ஜெயம் ரவி. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்