‘புஷ்பா 2’ திட்டமிட்ட ரிலீஸ் சந்தேகமே - காரணம் என்ன?

By ஸ்டார்க்கர்

‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத காரணத்தினால், திட்டமிட்டப்படி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 2-ம் பாகம் அறிவிக்கப்பட்டது.

இதன் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இடையே அல்லு அர்ஜுன் - சுகுமார் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனை சரிசெய்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கினார்கள். மேலும், ஃபகத் பாசிலிடம் வாங்கிய தேதிகள் சரியாக உபயோகிக்கப்படவில்லை என்பதால் அவரும் இதர படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இறுதியில் அவருடைய காட்சிகள் மட்டுமே பாக்கி இருந்தது. தற்போது அல்லு அர்ஜுன் - ஃபகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

டிசம்பர் 6-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு முடிவடையவில்லை. இறுதிகட்டப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் அனைத்து மொழிகளிலும் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தான் இந்தக் கேள்வி எழுந்திருக்கிறது. முன்னதாக, இரண்டு முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு அதிலிருந்து ‘புஷ்பா 2’ படக்குழு பின்வாங்கியது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்