நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, இந்தி, தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். இப்போது, புஷ்பா 2, சிக்கந்தர், குபேரா, கேர்ள் ஃபிரண்ட் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிறு விபத்து ஒன்றில் சிக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சமூக வலைதளத்தில் கடந்த மாதம் நான் ஆக்டிவாக இல்லை. எனக்கு சிறிய விபத்து ஏற்பட்டதுதான் அதற்கு காரணம். அதிலிருந்து குணமடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வெடுத்தேன்.
இப்போது நன்றாக இருக்கிறேன். உங்களை கவனித்துக் கொள்ள எப்போதும் முன்னுரிமை கொடுங்கள். நாளை நமக்கு உண்டா என்பது தெரியாது. ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.