சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படத்தில் ராஷ்மிகா

By செய்திப்பிரிவு

மும்பை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதில் ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தை அடுத்து சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியானது. இந்தப் படத்துக்கு 'சிக்கந்தர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சஜித் நாடியத்வாலா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார். அனிமல் படத்துக்கு பிறகு இந்த இந்திப் படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE