தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாக்களிப்பு @ நீலாங்கரை

By செய்திப்பிரிவு

சென்னை: ’தி கோட்’ படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்த விஜய் சென்னைக்கு வந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் மற்றும் அரசியல், திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர்.

அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், பனையூரில் உள்ள தனது வீட்டில் இருந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காரில் சென்று தனது வாக்கை செலுத்தினார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தார் விஜய். இந்த நிலையில் இன்று (ஏப்.19) மக்களவை தேர்தலை முன்னிட்டு விமானம் மூலம் சென்னை வந்து வாக்களித்துள்ளார் விஜய். அதிகாலை முதலே ரசிகர்கள் பலரும் விஜய்யின் வீட்டு முன்பு குவிந்திருந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் சைக்கிள் வந்து விஜய் வாக்களித்த விடீயோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நடிகர் அஜித் தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே அவர் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை செலுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE