கொச்சி: சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன், துபாயில் பிறந்து வளர்ந்தவர். நடிப்புக்காகக் கேரளா வந்தார். பரதம் மற்றும் , கர்நாடக சங்கீதம் கற்றிருந்த அவர், கடந்த 2018ம் ஆண்டு வெளியான ‘கினாவல்லி’என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதில் ஒரு பாடலையும் பாடியிருந்தார். சன்னி லியோன் நடித்த ரங்கீலா உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவா -பரவூர் சாலையில் விபத்தில் சிக்கிய இவர், அதற்காகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன் தினம் உயிரிழந்தார். அவர் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.