பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ 5 நாட்களில் ரூ.75 கோடி வசூல்!

By செய்திப்பிரிவு

சென்னை: பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ திரைப்படம் 5 நாட்களில் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பான் இந்தியா முறையில் வெளியான இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.80 கோடி என கூறப்படுகிறது. படம் மார்ச் 28-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் படம் ரூ.16 கோடியை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது படம் வெளியாகி 5 நாட்களை கடந்த நிலையில், உலகம் முழுவதும் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திலும் படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகத்தில் ரூ.3 கோடி முதல் 4 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE