ஜெய்ப்பூர்: எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் நிலா என்ற பெயரில் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மீரா சோப்ரா. தொடர்ந்து, ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர், ரக்ஷித் கெஜ்ரிவால் என்ற தொழிலதிபரைக் காதலித்து வந்தார். தனது திருமணம் குறித்து கடந்த மாதம் அறிவித்திருந்த மீரா சோப்ரா, ரக்ஷித் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை மீரா சோப்ரா வெளியிட்டுள்ளார். அவர்களுக்குத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.