பட்ஜெட் ரூ.5 கோடி, வசூல் ரூ.150 கோடி - சாதித்த ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தமிழக கலெக்‌ஷன் ரூ.35 கோடி

By செய்திப்பிரிவு

சென்னை: மலையாளத்தில் வெளியாகி திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூலித்துள்ளது. இதில் தமிழகத்தின் பங்கு ரூ.35 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 7 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை குவித்தது. 12 நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்தது.

இந்நிலையில், தற்போது படம் வெளியாகி 18 நாட்கள் கடந்த நிலையில் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தமிழ் ரசிகர்களின் வரவேற்பு.

‘குணா’ குகையில் நடக்கும் கதையும், இளையராஜா இசையும் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதன் விளைவாக தமிழகத்தை பொறுத்தவரை ரூ.35 கோடியை வசூலித்துள்ளது படம். விரைவில் மலையாளத்தின் அதிகபட்ச வசூலான ‘2018’ படத்தின் ரூ.175 கோடியை நெருங்கும் என கணிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE