கங்குலி பயோபிக்கில் ஆயுஷ்மான் குரானா 

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதை திரைப்படமாகிறது. இந்திய கிரிக்கெட் அணிக்கு10 ஆண்டுகள் கேப்டனாக இருந்த கங்குலி, ரசிகர்களால் தாதா என்று செல்லமாக அழைக்கப்படுபவர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருந்த கங்குலியின் பயோபிக்கில் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. இப்போது ஆயுஷ்மான் குரானா ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தை விக்ரமாதித்யா மோத்வானி இயக்குகிறார்.

லவ் ரஞ்சன், ஆங்குர் கார்க் இணைந்து தயாரிக்கின்றனர். படத்துக்காக, ஆயுஷ்மான் குரானா பயிற்சி எடுக்க இருக்கிறார். இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE