நடிகர் தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ 

By செய்திப்பிரிவு

நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அடுத்து அவர் தனது 50-வது படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அந்தப் படத்தில் நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

இதை அடுத்து அவர் மீண்டும் படம் இயக்குகிறார். இயக்குநராக அவரது மூன்றாவது படமான அதன் அறிவிப்பை வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இதில், தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. காதல் கதையை கொண்ட இந்தப் படத்துக்கு, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE