விஜய் தொலைக்காட்சியில் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுவருகிறது. இதில் பங்கேற்ற பல திறமையாளர்கள் திரையுலகில் பின்னணி பாடகர்களாக உள்ளனர். இந்நிலையில் சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சி இன்று முதல் தொடங்குகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமைசாலிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னணி பாடகர்களான மனோ, சுஜாதா, அனுராதா ராம் மற்றும் ஷான் ரோல்டன் நடுவர்களாக இடம்பெறுகிறார்கள். ம கா பா ஆனந்த், பிரியங்கா தேஷ்பாண்டே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.