தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படப்பிடிப்பு நிறைவு!

By செய்திப்பிரிவு

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அவரே தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். வட சென்னையை களமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தனுஷ் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தாக தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதற்கான பணிகளில் கவனம் செலுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அவர் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ‘டி50’ தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் லைன்அப்பில் ‘கேப்டன் மில்லர்’ பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. அடுத்து ஆனந்த் எல்.ராயின் ‘தேரே இஷ்க் மெய்ன்’, இயக்குநர் சேகர் கம்முலாவின் புதிய படங்களில் அவர் நடிக்க இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE