தெலுங்கு நடிகரை காதலிக்கிறாரா ரிது வர்மா?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தமிழில், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘மார்க் ஆண்டனி’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை ரிது வர்மா. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரமுடன் அவர் நடித்துள்ள ‘துருவநட்சத்திரம்’ வரும் 24ம் தேதி வெளியாக இருக்கிறது. இவர் நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. சமீபத்தில் நடிகர் வருண் தேஜ், நடிகை லாவண்யா திரிபாதியைத் திருமணம் செய்தார். அதற்கு முன் வருண் தேஜுக்கும் லாவண்யாவுக்கும் அல்லு அர்ஜுன் விருந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி குடும்பத்தினருடன் ரிது வர்மாவும் கலந்துகொண்டார். இதனால் அவர் வைஷ்ணவ் தேஜை காதலிப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள வைஷ்ணவ் தேஜ், ‘அந்த விருந்து நிகழ்ச்சியில் லாவண்யாவின் தோழியாகவே ரிது வர்மா கலந்துகொண்டார். அதற்கு மேல் அதில் ஏதுமில்லை. மற்றபடி காதல் என்று வெளியான தகவல்களில் உண்மையில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE