சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் ஓர் அறிவியல் புனைவுப் படம்: ரவிக்குமார் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: ‘அயலான்’ படத்தைத் தொடர்ந்து தான் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதை இயக்குநர் ரவிக்குமார் உறுதி செய்துள்ளார்.

’இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போனது. அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், இயக்குநர் ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்றில் தனது அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார். ’அயலான்’ படம் தாமதாம் ஆனபோது இந்தப் படத்தை எடுக்க திட்டமிட்டதாகவும், பின்னர் இதனை ‘அயலான்’ ரிலீஸுக்குப் பிறகே தொடங்கலாம் என்று முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். பல்வேறு கதைகளை எழுதி, அதில் இறுதியாக ஒன்றைத் தேர்வு செய்ததாகவும், ‘அயலான்’ படத்தின் வெற்றியே தனது புதிய படத்தின் வேகத்தை அதிகரிக்கும் என்றும் ரவிக்குமார் கூறியுள்ளார். ’இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ பாணியில் இந்தப் படமும் அறிவியல் புனைவுக் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE