‘அன்னபூரணி’ ஆகிறார் நயன்தாரா

By செய்திப்பிரிவு

சென்னை: நயன்தாராவின் 75 வது படத்துக்கு ‘அன்னபூரணி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதை ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். ஜெய், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ‘ராஜா ராணி’படத்துக்குப் பிறகு நயன்தாரா, ஜெய், சத்யராஜ் 3 பேரும் இதில் மீண்டும் இணைந்துள்ளனர்.

கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சச்சு, கார்த்திக் குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. தமன் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE