பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ முதல் நாளில் ரூ.32 கோடி வசூல்!

By செய்திப்பிரிவு

பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.32.33 கோடியை வசூலித்துள்ளது.

பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா, சரத்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் நேற்று (அக்.19) திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.32.33 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் உலக அளவில் முதல்நாளில் ரூ.54 கோடியை வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE