பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ எப்படி? - கவனம் ஈர்த்த ‘எக்ஸ்’ ரியாக்‌ஷன்கள்

By செய்திப்பிரிவு

பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதற்கான நெட்டிசன்கள் ரியாக்‌ஷன், எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்ப்போம்.

பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா, சரத்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அது குறித்த நெட்டிசன்களின் ரியாக்‌ஷகளைப் பார்ப்போம்.

நெட்டிசன் ஒருவர், “சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், ‘வித்தியாசமான ஸ்கிரிப்ட்’ என்ற படத்தை பாராட்டியுள்ளார்.

‘‘புதிய வசனங்களுடன் படத்தை எஞ்சாய் செய்தேன். சிறப்பாக வந்துள்ளது” என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கிறிஞ் சினிமா’ என ஒருவர் படத்தை விமர்சித்துள்ளார்.

‘வழக்கமான பாலகிருஷ்ணா படம். வசனங்களும், பள்ளியில் பேசும் விதமும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது” என நெட்டிசன் ஒருவர் பாராடியுள்ளார்.

“மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் படத்தின் வசனகர்த்தா” என நெட்டிசன் ஒருவர் நெகிழ்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE