சலார் கிளைமாக்ஸ் ரீ ஷூட்?

By செய்திப்பிரிவு

‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கும் படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமானப் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது. வரும் 28-ம் தேதி இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தைத் தள்ளி வைத்துள்ளதாகவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்தது.

இதற்கிடையே படத்தின் சில காட்சிகளை, ரீ-ஷூட் செய்ய பிரசாந்த் நீல் திட்டமிட்டுள்ளார். அதில் ஒன்று, கிளைமாக்ஸ் காட்சி. இந்தக் காட்சியை இன்னும் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் எடுக்கலாம் என்று பிரசாந்த் நீல் கூறியதாகவும் தயாரிப்பு தரப்பில் அதற்குச் சம்மதம் தெரிவித்ததால், இப்போது அதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், இதன் ரிலீஸ் மேலும் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE