சேரன் இயக்கத்தில் நடிக்கும் கிச்சா சுதீப் - அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் சேரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இயக்கத்தில் இறங்கியுள்ளார். அவர் இயக்கும் புதிய படத்தில் கிச்சா சுதீப் நாயகனாக நடிக்கிறார்.

சேரன் கடைசியாக 2019-ம் ஆண்டு வெளியான ‘திருமணம்’ படத்தை இயக்கியிருந்தார். அவரே நடித்தும் இருந்த இப்படத்தில் தம்பிராமையா, சுகன்யா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளாக அவர் எந்தப் படத்தையும் இயக்கவில்லை.

2021-ம் ஆண்டு வெளியான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்கத்துக்கு திரும்பியிருக்கும் சேரன் கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் கிச்சா சுதீப் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் ‘கிச்சா 47’ என அழைக்கப்படுகிறது. மேலும் படம் கன்னடத்தில் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE