இளையராஜா காலில் விழுந்து ஆசி பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா

By செய்திப்பிரிவு

சென்னை: ‘கருவறை’ என்ற குறும்படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இளையராஜாவை நேரில் சந்தித்து அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் ஸ்ரீகாந்த் தேவா.

இ.வி.கணேஷ்பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படம் ‘கருவறை’. இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இப்படத்தின் இசைக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டூடியோவுக்கு நேரில் சென்ற ஸ்ரீகாந்த் தேவா இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார். அவருக்கு இளையராஜா வாழ்த்து தெரிவித்தார். இதே போல படத்தின் இயக்குநரையும் இளையராஜா வாழ்த்தியுள்ளார். முன்னதாக ‘புஷ்பா’ படத்துக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்ட தேவிஸ்ரீபிரசாத் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE