“அப்பாவின் படங்களை ரீமேக் செய்து நடிக்க மாட்டேன்” - துல்கர் சல்மான்

By செய்திப்பிரிவு

கொச்சி: “என் அப்பாவின் எந்தப் படங்களின் ரிமேக்கிலும் நடிக்க மாட்டேன்” என நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “துபாயில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் மேனேஜராக பணியாற்றிக்கொண்டிருந்த நான் சினிமாவில் இருந்த காதலால் இந்த வேலையை உதறித்தள்ளிவிட்டு அப்பாவின் அடிகளையொட்டி சினிமாவுக்கு வந்தேன். என் அப்பாவை சினிமா துறையில் மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாக பார்க்கிறேன்” என்றார்.

மேலும் அவர் படங்களை ரீமேக் செய்வது குறித்து பேசுகையில், “உண்மையில் எனக்கு படங்களை ரீமேக் செய்வதில் நம்பிக்கை இல்லை. கிளாசிக்ஸைத் தொடாமல் அப்படியே விட்டுவிட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்பாவின் எந்தப் படங்களின் ரீமேக்கிலும் நடிக்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.

சீதா ராமம் வெற்றியை தொடர்ந்து ’கிங் ஆஃப் கோதா’ என்ற புதிய படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவான இப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE