தூத்துக்குடியில் தொடங்கும் விஷால் பட ஷூட்டிங்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் விஷாலின் 34-வது படத்தை ஹரி இயக்குகிறார். இன்னும் பெயிரிடப்படாத இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஹரி இயக்கத்தில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களில் நடித்திருந்தார் விஷால். இப்போது 3 வது முறையாக அவருடன் இணைகிறார். இது, வித்தியாசமான போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்க இருந்தது. அப்போது தொடங்கவில்லை. அடுத்து 22-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. சில காரணங்களால் அப்போதும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்நிலையில் வரும் 11-ம் தேதி முதல் தூத்துக்குடியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE