‘தண்டகாரண்யம்’ படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய ‘அட்டக்கத்தி’ தினேஷ்

By செய்திப்பிரிவு

நடிகர் அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் ‘தண்டகாரண்யம்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் உருவான படம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’. விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற இந்தப்படத்துக்கு டென்மா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கும் இரண்டாவது படத்துக்கு ‘தண்டகாரண்யம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், ஷபீர், ரித்விகா, வின்சு, பாலசரவணன், யுவன் மயில்சாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான தண்டகாரண்யம் படத்தின் படப்பிடிப்பு ஜார்கண்ட், ஒடிசா, திருவண்ணாமலை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. படப்பிடிப்பு நிறைவு பெற்று இன்றுன்முதல் டப்பிங் பணிகள் துவங்கியிருக்கிறது .படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE