முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.7 கோடியை தாண்டிய ‘மாவீரன்’ வசூல்

By செய்திப்பிரிவு

சிவகார்த்தியேன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.7 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இதனை இயக்கியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக வெளியாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

மடோன் அஸ்வினின் முந்தைய படமான ’மண்டேலா’ வித்தியாசமான கதைக்களத்துடன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி வரவேற்பை பெற்றதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. நேற்று (ஜூலை 14) திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடைய வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.35 கோடி முதல் ரூ.40 கோடிக்குள் உருவாகியுள்ளதாக கூறப்படும் இப்படம் ஃபேன்டஸி ஆக்‌ஷன் டிராமா ஜானரில் முக்கியமான விஷயத்தை கதைக்களமாக கொண்டுள்ளது.

இந்நிலையில், படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ.7 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் படம் ரூ.9 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வாசிக்க > மாவீரன் விமர்சனம்: மாவீரன் Review: அதகளமும் அக்கறையும் நிறைந்த களத்தில் நிகழ்த்தப்பட்டதா பாய்ச்சல்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE