விஷால் - ஹரி பட ஷூட்டிங் இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது.

ஹரி இயக்கத்தில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களில் நடித்திருந்தார் விஷால். இதையடுத்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இயக்குநர் ஹரியை பொறுத்தவரை கடந்த ஆண்டு அவரது இயக்கத்தில் ‘யானை’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விஷால் கடைசியாக ‘லத்தி’ படத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் அடுத்து இணையப்போகும் புதிய படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் 3வது முறையாக ஹரியுடன் விஷால் இணைவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. விஷாலின் 34-வது படமான இது வித்தியாசமான போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. சுகுமார் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த 7ஆம் தேதி இந்தப் படத்துக்கான போட்டோஷூட் நடந்தது. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை 15) சென்னையில் தொடங்குகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE