‘அலா வைகுண்டபுரமுலு’ பட இயக்குநருடன் மீண்டும் இணையும் அல்லு அர்ஜுன்

By செய்திப்பிரிவு

நடிகர் அல்லு அர்ஜுன் ‘அலா வைகுண்டபுரமுலு’ பட இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் நான்காவது முறையாக இணைய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ‘ஜூலாய்’, ‘S/O சத்தியமூர்த்தி’ மற்றும் ‘அலா வைகுண்டபுரமுலு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் ‘அலா வைகுண்டபுரமுலு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்தக்கூட்டணி நான்காவது முறையாக மீண்டும் இணைகிறது. ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது. பெயரிடப்படாத இந்தப் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுனை பொறுத்தவரை அவர், ‘புஷ்பா: தி ரூல்ஸ்’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். தொடர்ந்து கொரட்டாலா சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸை பொறுத்தவரை தற்போது அவர் மகேஷ்பாபுவை வைத்து ‘குண்டூர் காரம்’ படத்தை இயக்கி வருகிறார். ‘குண்டூர் காரம்’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

அறிவிப்பு வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE