பாதுகாவலரா? சர்வாதிகாரியா? - கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடிக்கும் ‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகும் படம் 'எமர்ஜென்சி'. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அத்துடன், படத்தை அவரே இயக்கியும் உள்ளார். படத்திற்கு திரைக்கதை, வசனம் ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை கங்கனா நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து இறுதிகட்டப் பணிகள் நடந்துவந்த நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் விதமாக ஒரு டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கங்கனா, “பாதுகாவலரா அல்லது சர்வாதிகாரியா? நம் தேசத்தின் தலைவர் தன் மக்கள் மீதே போர் தொடுத்த நமது வரலாற்றின் இருண்ட காலகட்டத்தை காணுங்கள்” என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE