ஆக.27-ல் ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா 2’ படப்பிடிப்பு தொடக்கம்?

By செய்திப்பிரிவு

ஆகஸ்ட் 27-ம் தேதி ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை ரிஷப் ஷெட்டி விரைவில் முடிக்க உள்ளதாகவும், படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரமாண்டமான பட்ஜெட்டில் பான் இந்தியா முறையில் உருவாகும் ‘காந்தாரா 2’ படம் 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

மழைக்காலத்தில் நடக்கும் கதை என்பதால் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாத இறுதியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி முன்பே கூறியதுபோல இந்தப் படம் ‘காந்தாரா’ படத்தின் முன்கதையை (prequel) அடிப்படையாக கொண்டு உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE