புதிய கதை களத்துடன் வருகிறார்  பிரபு சாலமன்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின்குமார், தம்பி ராமையா, நாஞ்சில் சம்பத் உட்பட பலர் நடித்த படம் ‘செம்பி’. நகைச்சுவை நடிகை கோவை சரளாவைக் குணசித்திர நடிகையாக காட்டிய இந்தப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து பிரபு சாலமன் ‘கும்கி 2’ படத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தப் படத்துக்கான கதை விவாதத்துக்காக கோவை சென்றுள்ளார். அந்தப் படம் தமிழுக்கு முற்றிலும் புதிய கதைக் களமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE