பிரபல இந்தி நடிகை பர்வீன் பாபி. கடந்த 1973-ம் ஆண்டு வெளியான ‘சரித்ரா’ என்ற இந்தி படத்தில் கிரிக்கெட் வீரர் சலீம் துரானியுடன் அறிமுகமானார். தொடர்ந்து தீவார், அமர் அக்பர் அந்தோணி, சுஹாக், ஷான், காலியா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 70 மற்றும் 80-களில் இந்தி திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த பர்வீன் பாபி, அப்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த இவர், கடந்த 2005-ம் ஆண்டு 50-வது வயதில், தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவர் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. அதில் ஊர்வசி ரவுதெலா நடிக்கிறார். இவர் தமிழில், ‘லெஜண்ட்’ படத்தில் நாயகியாக நடித்தவர். தீரஜ் மிஸ்ரா இந்த பயோபிக் கதையை எழுதியுள்ளார். வாசிம் எஸ்.கான் இயக்குகிறார்.