ஹைதராபாத்: தமிழில் சசிகுமாரின் ‘பிரம்மன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் லாவண்யா. தொடர்ந்து ‘மாயவன்’ உட்பட சில படங்களில் நடித்தார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், நடிகர் வருண் தேஜை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. வருண் தேஜ், சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான நாகேந்திர பாபுவின் மகன். லாவண்யாவும் வருணும் 2 படங்களில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் நிச்சயதார்த்தம் வரும் 9-ம் தேதி ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது. இதில் இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள இருக்கின்றனர். திருமணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.