அக்னி வீரர் பணி - மார்ச் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: சென்னை ராணுவ தலைமையக ஆள்சேர்ப்பு இயக்குநர் கர்னல் மோனிஷ் குமார் பாத்ரே, திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

இந்திய ராணுவத்தில் `அக்னி வீரர்' திட்டத்தில் பதினேழரை வயது முதல் 21 வயது வரையுள்ள ஆண், பெண்கள் சேரலாம். திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர், இளம்பெண்கள், மார்ச் 15-ம் தேதி வரை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர் 2002 அக்டோபர் 1-ம் தேதி முதல் 2006 ஏப்ரல் 1-ம் தேதிக்குள் சிறப்பு தகுதிகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கப்படும். ராணுவ ஆள்சேர்ப்பு வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறக் கூடியது.

தகுதி அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்பதால்,யாரிடமும் லஞ்சம் கொடுத்துஏமாற வேண்டாம். இடைத்தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

22 hours ago

வேலை வாய்ப்பு

8 days ago

வேலை வாய்ப்பு

23 days ago

வேலை வாய்ப்பு

23 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

மேலும்