‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’: பிப். 18, 19-ல் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்புக்கான வெப்பினார்

By செய்திப்பிரிவு

சென்னை: தேசத்தின் பாதுகாப்புத் துறையிலுள்ள வேலைவாய்ப்புகளை, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரி இளங்கலை, முதுகலை மாணவர்கள் அறிய செய்யும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘தேசம் காக்கும் நேசப் பணிகள்’ எனும் வெப்பினார் தொடர் நிகழ்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்வில் சாய்ராம் கல்வி நிறுவனமும், ஆர்.எம்.கே. கல்வி நிறுவனமும் இணைந் திருக்கின்றன.

இந்த இணையவழி தொடர் நிகழ்வின் 11 மற்றும் 12-ம் பகுதிகள் வரும் பிப். 18, 19-ம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

நாளை (பிப். 18, சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள வெப்பினாரில், இந்தோ-திபெத் எல்லைப்படையின் டெபுடி கமாண்டன்ட், ‘இந்தோ-திபெத் எல்லைப்படை (ITBP) மற்றும் சசஸ்த்திர சீமா பல் (SSB)ஆகியவற்றில் உள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 19) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள வெப்பினாரில், ஹெச்ஏஎல் முதன்மை மேலாளர் (வடிவமைப்பு) கே.செல்வி, ‘பாதுகாப்பு பொதுத்துறையிலுள்ள (ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்)வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பிலும் உரையாற்ற உள்ளார்.

இந்த இரு வெப்பினார் நிகழ்வுகளையும் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து, கலந்துரையாடவுள்ளார்.

இந்நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.htamil.org/DKNP06 என்ற லிங்கில் பதிவுசெய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களைப் பெற 9944029700 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

12 days ago

வேலை வாய்ப்பு

12 days ago

வேலை வாய்ப்பு

27 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்