திருச்சி/ புதுக்கோட்டை: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 24-ம் தேதிகாலை 10.30 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், 10-ம் வகுப்பு முதல்பட்டப்படிப்பு வரை (பி.இ உட்பட) படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ முடித்த 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் தங்களது கல்விச் சான்றுகளின் நகல், சுயவிவரக் குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம் என ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 24-ம் தேதி காலை 10 மணிக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.