எடப்பாடியில் 10-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By செய்திப்பிரிவு

சேலம்: எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 10-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கவுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எடப்பாடி பகுதியைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 10-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கிச் சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் , கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

முகாமில், 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து கல்விதகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுநர்களும்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE