தூத்துக்குடியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (மே 13) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்பட்டாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE