காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஏப்.29) நடைபெற உள்ளது.
பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12-வது மற்றும் 10-ம் வகுப்பு படித்தவர்களில் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.