காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும்வட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் மார்ச் 4-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் உறுப்பினராகச் சேர்ந்து பயன் பெறலாம்.
இதில் இலவச பயிற்சி வகுப்புகளுடன் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் புத்தகங்கள், மாதாந்திர பருவ வெளியீடுகள் தினசரி நாளிதழ்கள் மற்றும் இணைய வசதியுடன் நூலகமும் பயன்பாட்டுக்கு உள்ளது என்றார்.