அஞ்சல் வழியில் குரூப்-2 மாதிரி தேர்வுகள்

சென்னை: தமிழக அரசுப் பணிகளில் காலியாக உள்ள 5,529 பணிஇடங்களை நிரப்ப குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் வெளியிட்டது. அதன் படி மே 21-ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற உள்ளது.

இத்தேர்வை எழுத ஏதாவது ஒரு பட்டப்படிப்பு போதுமானது. இடஒதுக்கீடு பிரிவினர் அனைவருக்கும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை என்பதால் இந்த தேர்வில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை உயரும். மேலும் தனியார் துறைகளில் பணியாற்றும் நபர்கள் அரசுப் பணிகளை விரும்பும் போக்கு கரோனா பெருந்தொற்று காலகட்டத்துக்கு பிறகு அதிகரித்துள்ளது. அதிக போட்டியுள்ள இந்த குரூப்-2 தேர்வை கிராமப்புற மாணவர்கள், இல்லத்தரசிகள், மாற்றுத் திறனாளிகள், சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் மற்றும் சுயமாக படிப்பவர்கள் ஆகியோர் மிகச் சிறந்த முறையில் எழுதி வெற்றியடைய, போட்டித் தேர்வுகளில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற TNPSC track என்னும் YouTube தளமானது மார்ச் 2-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை மொத்தம் 23 குரூப்-2 மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது.

இந்த மாதிரி தேர்வுகள் அனைத்தும் அஞ்சல் வழியில் நடைபெறுவதால் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் இந்த தேர்வை எழுதஇயலும். கூடுதல் விவரங்களுக்கு 9003490650 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. l

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE