சென்னை: பிஎஸ்சி நர்சிங் பட்டதாரிகளுக்கு சவுதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நர்சு வேலைவாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற பெண் நர்சுகள் தேவைப்படுகின்றனர். பிஎஸ்சி நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது 35-க்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம். ஊதியத்துடன் உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவையும் வழங்கப்படும்.
இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) பதிவுசெய்து தங்களின் சுயவிவர விண்ணப்பப் படிவம் மற்றும் கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட், பணி அனுபவச் சான்றிதழை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு பிப்ரவரி 18-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
» சஞ்சு சாம்சனுக்கு விரலில் எலும்பு முறிவு
» ரூ. 20 லட்சம் வழிப்பறி வழக்கில் சிறப்பு எஸ்ஐ உட்பட 4 பேருக்கு ஜாமீன்
இதற்கான நேர்காணல் பிப்ரவரி 23 முதல் 26-ம் தேதிவரை கொச்சியில் நடைபெறவுள்ளது. சவுதி புரபெஷனல் கிளாசிபிகேஷன், எச்ஆர்டி மற்றும் டேட்டாஃப்ளோ முடித்த நர்சுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பணிக்கு தேர்வுசெய்யப்படும் பணியாளரிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 6379179200 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
11 hours ago
வேலை வாய்ப்பு
20 days ago
வேலை வாய்ப்பு
27 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago