மலேசியாவில் கட்டிட பணியாளர், வெல்டர்களுக்கு வேலை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மலேசியாவில் பணிபுரிய கட்டிட தொழிலாளர்கள், கட்டிட உதவியாளர்கள், வெல்டர்கள் தேவைப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு அல்லது அதற்கு கீழ் படித்திருக்க வேண்டும்.வெல்டர் வேலைக்கு வெல்டிங் தகுதித்தேர்வு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.வயது 50-க்குள் இருக்க வேண்டும்.

கட்டிட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம், கட்டிட உதவியாளர்களுக்கு ரூ.28 ஆயிரம், வெல்டர்களுக்கு ரூ.40ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். ஊதியத்துடன் உணவு, இருப்பிடம், விமானச் சீட்டு, விசா ஆகியவையும் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்குச் செல்லவிரும்பும் ஆண் பணியாளர்கள் அயல்நாட்டுவேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) பதிவுசெய்து கொள்ளலாம். தங்களின் சுயவிவர விண்ணப்பம், கல்வி அனுபவச்சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் ஆகியவற்றைஆகஸ்ட் மாதம் 3-ம் தேதிக்குள் ovemclnm@gmail.ccom என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

பணிக்குச் செல்வோர் விசா கிடைத்த பின்னர் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதும்.கூடுதல் விவரங்களுக்கு 044-22505886,22502267 எண்களை தொடர்புகொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE