இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூலை 21-க்கு தள்ளிவைப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: இடைநிலை ஆசிரியர் தேர்வு ஜூலை 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் - செயலர் வி.சி.ராமேஸ்வர முருகன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஜூன் 23-ம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி நடைபெறுவதாக இருந்த இடைநிலை ஆசிரியர் தேர்வு, நிர்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்படுகிறது.

இத்தேர்வு ஜூலை 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,768 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட உள்ள இத்தேர்வுக்கு 26,510 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE